Wednesday, July 1, 2009

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ?

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பிஸியாக இருந்த அலுவலகம் காலை 9.25 மணி. பணியாளர்கள் ஒரு சிலர் அங்குமிங்கும் போர்கால அவசரம் போல நடந்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்து எதையோ தொலைத்து விட்டதுபோல் தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த அலுவலகத்தில் ஒருவர் கூட சும்மா இருந்ததாக தெரியவில்லை. காரணம் அன்று மேனேஜர் முன்கூட்டியே வந்துவிட்டிருந்தார்.

‘எக்ஸ்கியூஸ் மீ ’

என்ற இனிமையான குரல் அலுவலக நிசப்தத்தை கிழித்தெறிந்தது. ஒரு சிலர் திரும்பி யாரென்று பார்த்தனர்.

‘யார பார்க்கனும்’ - பியூன் ரங்கசாமி வந்து கேட்டான்.

‘ஹின்டுல… கிளாசிபைட்ஸ் பார்த்தேன், ரிசப்ஷனிஸ்ட் வான்டட் னு‘

என்று அவள் சிவந்த உதடுகள் வளைந்து நெளிந்து சொல்லும் போது அதற்கு கோரஸ் பாடுவது போல் அவள் கண்களும், புருவங்களும் அதற்கு இணையாக இறங்கி ஏறி அசைந்த அசைவில் வீசிய புயலில் அவள் கன்னங்குழியில் நிபந்தனையின்றி கவிழ்ந்தான், சற்று தூரத்தில் இதனை கவனித்துக் கொண்டிருந்த சேகர்.

சேகர் -

இந்த அலுவலகத்தில் அசிஸ்டென்ட் மேனேஜர். இளமை துள்ளும் இவன் வந்தாலே அலுவலக பெண்கள் பயந்து நடுங்குவார்கள். காரணம் இவன் வேலை விஷயத்தில் ரொம்ப ஸ்டிரிக்ட். தேவையான வளர்த்தி, சற்று சதைப்பிடிப்பான தேகம், வசீகரமான முகம், குரலில் கம்பீரமான சேகரை, ஒரு சில பெண்கள் காதலிக்க முற்பட்டு தோல்வியை மனம் செய்து கொண்டனர்.


“நேரா போய், ரைட்ல திரும்புமா, அங்க தான் மேனேஜர் கேபின் இருக்கு. அங்க சேர்ங்க இருக்கும், அங்க உக்காருமா, அப்ளிகேஷன் கொண்டாந்திருக்கியா, குடு, உன்னை கூப்பிடுவாங்க அப்போ நீ இன்டர்வியூக்கு போகலாம்”

என்று அதை வாங்கிக் கொண்டான்.


சேகர் இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை என்று பொய் சொன்னால், அதை வாசகர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இங்கொன்றும், அங்கொன்றுமாக ரசிப்பான். ஆனால் மனதில் ஒரு பூகம்பத்தை இவளைபோல யாரும் ஏற்படுத்தவில்லை.


பியூனிடம் அப்ளிகேஷனை கொடுத்துவிட்டு மேனேஜர் கேபின் நோக்கி நடந்தாள்.

‘வாவ்! என்ன நடை’, அழகிய பின்னந்தலை மற்றும் தலைமுடி, அளவான தோள்கள், அளவான கைவீச்சு, பூ மீது நடப்பது போன்று மிருதுவான நடை, கஞ்சிப்போட்டு அயர்ன் செய்த பிங்க் புடவை கலையாமல் லேசான தைரியத்துடன் சற்று வேகமான நடை, அழகாக அளவாக அசையும் பின்புறம், யானை தந்தத்தில் செய்தது போன்ற கைகள் வீசி அவள் நடக்கையில், தன்னை மறந்து சேகர் அவளை ரசிக்க. (சில ஈக்கள் அவன் வாயினுள் ஊர்வலம் நடத்தி முடித்திருந்தன) சில நிமிடங்கள் கழித்தே உணர்வு பெற்ற நிலையில் வெட்கத்துடன் சுற்றி பார்த்து, யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு கஷ்டப்பட்டு வேலை செய்ய முற்பட்டான். கண்கள் அவளை பிரிய மனமின்றி அவள் மீதே நிலைத்துவிட்டன.

ரங்கசாமி பயோ-டேட்டாவை கொண்டு வந்து சேகரிடம் கொடுத்தான்.
‘என்ன இது? ’ - சேகர்
’அப்ளிகேஷன் சார், ஒரு புள்ள இப்போ வந்துச்சே சார், ரோஸ் கலர் புடவை கட்டிட்டு, அந்தம்மாவோடது சார்’ - பியூன் சற்று மரியாதையுடன் கூறினான்.


மனதில் மகிழ்ச்சி தாண்டவமாட அந்த பயோ-டேட்டாவை வாங்கினான்.

பெயர் : மது…….

வயது : 24.......

என்று முழு பயோ-டேட்டாவையும் மின்னல் வேகத்தில் மனப்பாடம் செய்து விட்டான்.

மேரிடல் ஸ்டேடஸ் : அன்மேரிட் - என்பதை பார்த்தபோது, அவன் நாக்கு எச்சிலுக்கு பதில் சர்க்கரையையே சுரந்தது. அதற்குள் மேனேஜர் போனில் அழைக்க, எழுந்து கேபினை நோக்கி சென்றான். இம்முறை சற்று உடைகளை சரி செய்து கொண்டு, தலை முடியை சற்றே கோதிவிட்டு சென்றான்.

அவளை கடக்கும்போது சந்தனவாசம் சரிகமபதநி பாடியது. சற்றே நடையின் வேகத்தை குறைத்து பயோ-டேட்டாக்களை பிரித்து பார்ப்பதுபோல் இடப்பக்கம் அமர்ந்திருந்த மதுவை ஓரக்கண்ணால் எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவு பார்க்க முற்ப்பட்டான்.

அவன் வருவதை பார்த்து மதுவும் தலை நிமிராமல் கண்களை மட்டும் ஏற்றி அவன் தன்னை பார்ப்பதை கவனித்தாள்.


அவள் கண்களை அதே கோணத்தில் பார்த்த சேகர்,

“சான்ஸே இல்ல வாட் எ ஐஸ், என்ன கலர், என்ன பேஸ், ஐயோ அவ மூக்கு, லிப்ஸ், வாவ் ஐ கான்ட் பியர் இட்”
என்று மனதிற்குள் சத்தமாக சொல்லி குதித்தான். இதை நினைத்துக் கொண்டே அவன் மேனேஜர் கேபினை கடந்து நேராக சென்று விட்டான்.

பின்னர் சுதாரித்துக்கொண்டு எதிரே இருந்த பிரஷ்ரூமில் நுழைந்து, பின்னந்தலையில் செல்லமாக தட்டிக்கொண்டு,

“டேய் ஸ்டுப்பிட், போய் வேலைய பாருடா, மேனேஜர் சவுண்ட் விடப் போறாரு” என்று கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து வெட்கம் கலந்த சிரிப்புடன் சொல்லி, தன்னை மீண்டும் சரி செய்துகொண்டு மேனேஜர் அறைக்கு சென்றான்.

“மே ஐ கம் இன் சார்” என்று உள்ளே நுழைந்தான்.

சேகருக்கு மட்டும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே வருவதற்கு அனுமதி இருந்தது. மற்றவர்கள் சேகரிடம் கேட்டு பின்னர் மேனேஜர் அனுமதித்த பிறகே அவரை காணமுடியும்.

“எஸ் சேகர் எத்தனை கான்டிடேட் வந்திருக்காங்க...”

ஏ.சி. அறையிலும் வியர்த்திருந்த தன் வழுக்கை தலையை லேசாக விரலால் ஸ்டைலாக வருடியவாறு கேட்டார். அவரது கோட் லேசாக பிதுங்கியபடி அவரது வயிற்றின் அளவை படம்பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தது.

“சார் மொத்தம் 18 கோன்டிடேட்ஸ் சார், அதுல நான் சார்ட் அவுட் பண்ண 8 பேரோட லிஸ்ட் இந்த பைல்ல இருக்கு. மீதி 10 கேன்டிடேட்ஸோட பேப்பர்ஸ் இதுல இருக்கு சார்” –

என்று இரண்டு பைல்களை கொடுத்தான்.

“ஓ.கே. பார்மாலிட்டிக்காக முதல்ல இந்த 10 பேர பார்த்து அனுப்பிடுவோம், நெக்ஸ்ட் நாம அந்த 8 பேர பார்க்கலாம் ஓ.கே. ஐ வில் கால் யூ லேட்டர்”

- மேனேஜர்.
“தேங்க்யூ சார்” - வெளியே புறப்பட்டான்.

வெளியே கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த மது கேபின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு நார்மலாக உட்கார முற்பட்டாள். அதற்குள் வெளியே வந்த சேகர், அவள் பாதங்களை கனுக்கால் வரை பார்க்க நேர்ந்தது.
சத்தமிடும் முத்து இல்லாத கொலுசு அவள் பாதங்களை தன் இரு கரங்களாலும் கொஞ்சியபடி அனைத்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே சிகப்பும் பிங்கும் கலந்த நிறத்திலிருந்த அவள் பாதங்களை, டார்க் மெரூன் கலர் செருப்பு மெல்லிய பட்டையால் பிடித்துக் தொங்கிக் கொண்டிருந்தது.

பயோ-டேட்டா லிஸ்டில் மதுவின் பெயரை கடைசியாக வைத்திருந்ததால் சந்தோஷமாக தன் இருக்கைக்குச் சென்றான்.
சேகரின் இருக்கையிலிருந்து பக்கவாட்டில் தான் இன்டர்வியூவிற்கு வந்தவர்களை பார்க்க முடியும். அவள் கன்னத்தில் படர்ந்திருந்த அவள் காதோர இளம் மயிர்கள் வாலியின் கவிகளை இளையராஜாவின் இசையில் பாடிக்கொண்டிருந்தன.


மணி 12.45 கடைசியாக, மேனேஜர் அறையில் இருந்து அழைப்பு மணி ஓசை கேட்டு மது உள்ளே சென்றாள்.

மீண்டும்

‘எக்ஸ்கியூஸ் மீ ’ - என்ற இனிய ஒலி கேட்டு கேபினுள் இருந்த மேனேஜர்
‘யெஸ் கம் இன்’ - என்று சொல்ல, அந்த அறை சந்தன வாசத்தால் நிரம்பியதை அவரால் தடை செய்ய முடியவில்லை.

பயோ-டேட்டாவை பார்த்தவாறே கவிழ்ந்திருந்த மேனேஜர் குவாலிபிகேஷன் ஒன்றும் சரியில்லையே - என்று மனதில் நினைத்தவாறு நிமிர்ந்தார்.

ஃபேன் காற்றின் லேசான வேகத்தில் கலைந்து, கன்னாபின்னாவென்று முகத்தில் முத்தமழை பொழிந்துகொண்டிருந்த தலைகேசத்தை சரி செய்து கொண்டிருந்த மதுவை கண்ட மேனேஜருக்கு அடிவயிற்றிலிருந்து உச்சந்தலைக்கு மின்சாரம் பாய்ந்தது.
அவள் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை தன் பார்வையை சிரமப்பட்டு பயணிக்க செய்தார்.
அவர் உடலில் சோர்ந்து போய் தொங்கிக் கொண்டிருந்த ரோமங்கள் சிலிர்த்து எழுந்தன.
கனநேரத்தில் நிலைமையை உணர்ந்த மேனேஜர் வீரபாண்டியன் சுதாரித்துக் கொண்டு

“பிளீஸ் பீ சீட்டட்” -என்றார்.

“தாங்க்யூ சார்”

என்று எவரையும் மயக்கும் இனிமையான அந்த குரல் கேட்டு மேனேஜர் மனதில் காமன் கனைகளை தொடுத்து ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான். மீண்டும் அவளை பார்த்த மேனேஜர் பார்மல் கேள்விகளை கேட்டவாறு அவளை ரசிக்கத் தொடங்கினார். அவள் தலை அசைவுகள், கண்களின் அசைவுகள், அதரங்களின் வளைவுகள், கழுத்து என்று அவரால் அவர் கண்களை கன்ட்ரோல் செய்ய முடியாமல் தவிப்பதை மதுவால் உணர முடிந்தது. ஆனாலும் அவளுக்கு இந்த வேலை அவசியம் என்பாதால் அமைதிகாத்தாள். மன்மதன் செய்த ரகளையில், மதுவை எப்படியாவது இந்த வேலைக்கு சேர்த்துவிட்டால், ஏதாவது சமயம் பார்த்து சுவைத்துவிடலாம் என்ற சில்மிஷ திட்டத்துடன்,

“ஓ.கே. மிஸ்.மது, யூ ஆர் அப்பாய்ன்டட் ஆஸ் ரிசப்ஷனிஸ்ட் ஆப் அவர் கம்பெனி”
என்று கைகொடுத்தார், அவள் பட்டுகரம் பட்ட மேனெஜர், போதையில் தள்ளாடினார். அவர் தலையை காமன் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிக்கொண்டிருந்தான்.
■■■■
“வெரிகுட் மிஸ் மது, இதுக்கு முன்னாடி இருந்த ரிசப்ஷனிட்கள் 6 மாசம் ஆனாலும் தடுமாறிகிட்டிருந்த நம்ம க்ளையன்ட்ஸ் லிஸ்ட் எல்லாம் நீங்க வந்த 2 மாசத்திலேயே பிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கீங்களே, கீப் இட் அப், இல்லைன்னா ரிசப்னிஸ்டாக சேர்ந்த உங்களை 2 மாசத்திலேயே பி.ஏ. வா மாத்துவேனா” - மேனேஜர்.

“நோ சார் எல்லாம் உங்க என்கரேஜ்ட்மென்ட்டும் நீங்க எம்மேல வச்சிருந்த நம்பிக்கையும்தான் சார்” - மது

“நோ மது நோ,
நான் முதல்ல சொன்னாமாதிரி, இட்ஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் ஆர்ட் வொர்க் அன்ட் சின்சியாரிட்டி, நெக்ஸ்ட் மன்த் உங்களுக்கு ஒரு சர்ப்பிரைஸ் காத்துக்கிட்டிருக்கு, அது உங்க இன்கிரிமென்டாக கூட இருக்கலாம்”
என்று நயாகரா வீழ்ச்சி அளவிற்கு ஜொள்ளு வடித்தார். அவர் வடித்த ஜொள்ளு ஆபீஸ்-ஐ நீச்சல்குளமாக்கிவிட்டிருந்தது.

“தாங்க்யூ சார்” என்று டென்ஷனாக தன் கேபினில் வந்தமர்ந்தாள்.

இப்போதெல்லாம் அடிக்கடி மேனேஜர் மதுவை தன் அறைக்கு அழைப்பதும், ஏதாகிலும் சில்மிஷமாய் பேசுவதும், இதனால் இவள் மூட்அவுட் ஆகி வெளியே டென்ஷனாய் வருவதையும் சேகர் கவனிக்க தவறுவது இல்லை.
சேகருக்கு இப்போதெல்லாம் மேனேஜர் அறைக்கு செல்லும் வேலை குறைந்திருந்தது. காதல் மயக்கத்தில் மூழ்கியிருந்த சேகருக்கு இதையெல்லாம் கண்டுகொள்ள கண்கள் இல்லை, இரண்டு கண்களையும் மதுவிடம் குத்தகைக்கு இலவசமாக விட்டுவிட்டிருந்தான்.
நாளுக்கு நாள் அவள் மற்றவர்களிடம் பேசுகிற விதம், நன்றாக பதவியில் வளர்ந்திருந்தாலும், அடக்கமான நடத்தை, விசேஷமான அவளது பாடி லேங்க்வேஜ், பேசும்போது கண்களும் உதடுகளும், நடத்திக் கொண்டிருந்த இசையடன் கூடிய நடனநிகழ்ச்சியில் தனைமறந்து தேன்கூட்டில் சிறைவைக்கப்பட்ட பட்டாம்பூச்சியாய் பறக்க மணமின்றி சிறகுகளை அடித்தவண்ணம் லயித்திருந்தான்.

தினமும் ஆபிஸ் வரும்போது இன்றைக்கு எப்படியாகிலும் தன் காதலை சொல்லிவிடவேண்டுமென்று துடிப்பான். இன்றைக்கு தன்னை அவள் எத்தனை முறை தன் தேன்ததும்பிய விழிகளால் பார்ப்பாள், இதழ்குவித்து நகைப்பாள் - என்று கணக்கெடுக்க ஆரம்பித்துவிட்டிருந்தான்.

“என்னாச்சு மது, டென்ஷனா இருக்கீங்க” - என்ற சேகரின் குரல் கேட்டு நிமிர்ந்த மது
“நத்திங் சார், கொஞ்சம் வொர்க் டென்ஷன், சார் வேற இன்னைக்கு எத்தனை மணியானாலும் வொர்க் முடித்துவிட்டு போக சொல்லியிருக்கிறார்... அதான் ... ”

“ஓ..
இட்ஸ் ஓகே...
வாங்களேன் ரிலாக்ஸா ஒரு காபி சாப்பிடலாம்”

என்று மிகுந்த எதிர்ப்பார்ப்போடு ஆனால் காஸீவலாக அழைப்பது போல் அழைத்தான்.
இருவரும் காபி மெஷினை நோக்கி நகர்ந்தனர்.
■■■■
இப்போதெல்லாம் மது, சேகரை கவனிக்க தொடங்கியிருந்தாள்... அவனது கண்களும் மனதும் தன்னை விரும்புகிறதை லேசாக புரிந்துகொள்ள தொடங்கியிருந்தாள். இவளுக்கும் சேகர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தும் அதை காட்டிக்கொள்ளாமல் அவனிடம் இருந்து விலகியேயிருந்தாள்.

காலம் தன் தேரை வெகுவேகமாக ஓட்டி, 12 மாதங்களை மிக வேகமாக கடந்துவிட்டிருந்தது. தேரின் வேகத்தில் பாதையின் மேடுபள்ளங்களில், பாதை திருப்பங்களில், ஏற்பட்ட மாற்றங்களால்

“மிஸ்.மது” என்பது “ஹாய் மது” வாகவும்,

“சார்” என்பது “ஹாய் சேகர்” ஆகவும் மாறியிருந்தாலும்,


மது சற்றும் தன்னை நெருங்கியதாக சேகரால் உணர முடியவில்லை. இதனால் அவன் சற்றே அவள் மீது கோபம் கொண்டிருந்தான்.

“ரொம்ப திமிர் பிடித்த பெண் போலிருக்கு...” என்று சேகர் அவளை நெருங்கும்போது நினைப்பதுண்டு, பலமுறை இலைமறைவு காய்மறைவாக தன் காதலை சொல்லும்போதெல்லாம் அவள் அதனை காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை.


ச்சீ..ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று எட்டாத பழத்தை பழித்த நரியைப் - போல சேகர் நினைக்க மறுத்தான். பலநேரங்களில் மேனேஜர் கேபினை விட்டு சிறிது வேகமாகவும் வெறுப்புடனும் வெளியே வரும் மதுவைக் கண்டு, உள்ளே மேனேஜர் சில்மிஸம் செய்கிறார் என்பதை சேகரால் உணரமுடிந்தது. இதற்கு ஒரு முடிவு கட்றேன் - என்று தன் மனதில் நினைத்தான்.

அன்று லஞ்ச் டைம் முடிந்து சரியாக மணி 2.25 ஏறக்குறைய எல்லா அலுவலர்களும் நித்திரை மயக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். ஒரு சிலர் விடுப்பில் இருந்ததால் அலுவலகம் சற்று காலியாக இருந்தது.
அழைப்பு மணி ஓசை கேட்டு சில வினாடிகளில்,

“மே ஐ கம்இன் சார்” - என்றது மதுவின் குரல்.

உண்ட மயக்கத்தில் தள்ளாடிக்கொண்டு இன்றைக்கு எப்படியாகிலும் சில பிராக்டிக்கல்ஸ் செய்துவிடவேண்டுமென்று, காமனின் கட்டளைகளால் தன்னையிழந்து கற்பனையில் மதுவை முத்தமிடுவது போலவும்…….. கட்டியனைப்பது போலவும்……….. இன்னும் பல விகற்ப்பமான விபரீத எண்ணங்களை தன் உடல் முழுவதும் ஏற்றிக் கொண்டிருந்த மேனேஜர்.

“யெஸ் கம் இன், சாப்டாச்சா” - என்று குழைந்தார்.

“யெஸ் சார், சாப்டாச்சு சார்” -மது.

ஒருசில வினாடிகள் ஏதேதோ பழைய விஷயங்களை விசாரித்த மேனேஜர்.

“உடம்பு ஒரு மாதிரியா இருக்குமா,

இந்த சிக்கன சாப்டாலே, ஏதோ ஒன்று உள்ள நடக்குது... ”
என்று பல அர்த்த பாஷையில் லேசாக வழியத் தொடங்கினார்.

“சரி மா... இந்த கொட்டேஷன்ல இந்த டென்த் பாயின்ட் எனக்கு சரியா புரியலை, கொஞ்சம் இப்படி வந்து எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுமா.. ”
என்று எதிரே அமர்ந்திருந்த மதுவை தன் அருகில் அழைத்தார்.

அறையின் நிசப்தத்திலும் மேனேஜரிடம் காமன் போடும் ஆட்டத்தின் சத்தம் மதுவின் காதல் ஒலிக்க தொடங்கியது. சிறிது நடுக்கத்தோடு அவர் பக்கவாட்டில் சென்று நின்றாள். மேனேஜர் உடலின் உஷ்ணம் ஏ.சி. அறையிலும் உஷ்ணத்தை ஏற்ப்படுத்த தொடங்கியிருந்தது.

அருகில் இருந்த மதுவை காம கண்களால் மேயத் தொடங்கினார். மேடு பள்ளங்களில் நிலை தடுமாறி...

“திஸ் பாயின்ட் ” என்று நடுங்கிய விரல்களால் கான்பித்து, பைலை அவள்புறம் நீட்டாமல் அவள் இன்னும் நெருங்குவதற்காக பைலை இவர் புறம்பாகவே வைத்து கொண்டிருந்தார்.

“எந்த பாயின்ட் சார்” என்று சற்றே நெருங்கிய மதுவின் வாசத்தில் தன் நிலையிழந்த மேனேஜர் எழுந்து
அவளது இடுப்பை சுற்றி வளைத்து அவளை முகத்துக்கு நேராக கட்டிப்பிடித்தார். கன நேரத்தில் நடந்த இந்த நிகழ்வால் மது சுதாரிப்பதற்குள் அவள் முந்தானையை முன்புறம் இழுக்க, முந்தானையை பிடித்திருந்த பின் அதற்கு விடுதலை கொடுத்தது.

இருகப்பிடித்த நிலையில் மேனேஜரின் கைகள், சுற்றிலும் அவளை வளைத்திருக்க, இவள் கைகள் முத்தமிட துடித்து கொண்டிருந்த மேனேஜரின் மோவாயை தள்ளி அப்புறப்படுத்த போராடிக் கொண்டிருந்தன. இவள் மேஜை மீது சாய்க்கப்பட்டதால் விலகி ஓடவும் முடியவில்லை.

சில சப்தங்கள்,......... சில கெஞ்சல்கள்,....... சில தவிப்புகள் ….. என

சில வினாடிகள் நடந்த இந்தப் போராட்டத்தில் இருவரில் யாரோ ஒருவர் அழைப்பு மணியின் சுவிட்சை தட்டிவிட, ஒலி கேட்டு சேகர் எதிர்பாராத விதமாக கதவைத்திறந்தான். அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

என்ன நடக்கிறது என்பதை சேகர் உணர நினைத்த வினாடியில் மேனேஜர் தன் பிடியை தளர்த்த, முந்தானையை சரி செய்து கொண்ட மது தன் ஹீல்ஸ் செருப்பினால் மேனேஜரின் முகத்தில் விளையாடினாள்,
கண்கள் சிவந்தன, கண்ணீர் ததும்பியது.

நிலைதடுமாறிய மேனேஜரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு கண்களும் உடலும் வியர்த்த நிலையில், ஒரு சிறிய ஓட்டம் ஓடி கேபினை விட்டு வெளியேறினாள்.

நிலைமையை உணர்ந்த சேகர், மேனேஜரை ஒரு உக்கிர பார்வையால், பார்த்துவிட்டு கேபின் கதவின் மேலிருந்த தன் கையை எடுக்க, கதவு தானாக மூடிக் கொண்டது.


உடல் குலுங்கி குலுங்கி விக்கித்துக் கொண்டிருந்த மதுவை கண்ட சேகருக்கு அவளருகில் சென்று அவள் கண்ணீர் துடைத்து தன் இரு கைகளாலும் அவள் கன்னங்களை பிடித்து, அழாதே என்று சொல்லி அவள் தலையை தன் மார்பு மீது சாய்த்துக் கொண்டு அவள் தலையை கோதிவிட வேண்டும் போல் இருந்தது.

ஆனால் என்ன செய்ய முடியும் உரிமையில்லையே !

எப்படியாவது மேனேரை கைக்குள் போட்டுகொண்டு தன் காரியங்களை சாதித்துகொள்ள துடிக்கும் பெண்களை கண்டிருந்த சேகரின் மனதில், சிகரத்தில் அமர்த்தப்பட்டாள் மது. இதை நினைத்தவாறே ஒரு கப் தண்ணீருடன் மதுவின் கேபினுள் நுழைந்தான். கோபத்திலும் அழுததிலும் அவள் முகம் சிவந்திருந்தது. கைகள் நடுங்கின, சுவாசம் வேகமாக இருந்தது.
அவள் எதிரில் அமர்ந்த சேகர் ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு...

“ஐஆம் சாரி மது, பிளீஸ், இந்த தண்ணீரை குடிங்க”

-என்று மேஜையின் மீது வைத்தான்.

………………

…………………..

“மேனேஜர் இப்படி நடந்துகொள்வார் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கவில்லை”
என்று சேகர் வாயை மூடுவதற்குள் மது கோபமாக...

“நீங்கள் என்ன யோக்கியமா எத்தனை முறை என்னை தவறா பார்த்திருக்கீங்க” என்று வெடித்தாள்.

கோபத்தில் தெளிவில்லாமல் உதிர்ந்த இந்த வார்த்தைகளை கேட்ட சேகர் மலைத்து, எழுந்து. எதுவும் சொல்லமுடியாமல் குற்றவுணர்வோடு தன் கேபினுக்கு நடந்தான்.

சில வினாடிகளில் உடையை சரி செய்து கொண்ட மது, பேக்கை தோளில்மாட்டிக்கொண்டு வேகமாக நடையைகட்டினாள். தன் கேபினைகடந்து அவள் சென்றதை கூட சேகர் கவனிக்கவில்லை.
மேஜையில் முகம் கவிழ்ந்தான்.
■■■■
மாலை 5.30 மணி, மெரீனா பீச்சின் ஓரம் நின்றுகொண்டிருந்த ஒரு படகின் மீது உட்கார்ந்து, வானத்தையும், கடலையும், அலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தான் சேகர். ஆனால் அவன் பார்வையிலோ மதியம் நடந்த நிகழ்வு ஓடிக்கொண்டிருந்தது. காதில் அலையோசையை தாண்டி “நீங்கள் மட்டும் யோக்கியமா? ” என்ற வார்த்தை எக்கோ போல் மீண்டும் மீண்டும் காது வழியே, அவன் மனதை ஹாக்சா பிளேட் போட்டு கதற கதற கிழித்துக் கொண்டிருந்தது.

மாலை வேளையின் வெளிச்சத்திலும் இருண்டு போயிருந்தது அவன் முகம்... 1100 வயலின்கள் அவன் அருகில் சோக கீதத்தை இசைத்து கொண்டிருந்தது.

காதலிப்பது தவறா?

நான் என்ன அப்படி தவறாக பார்த்து விட்டேன்.

இதுவரை எந்த பெண்ணையும் நான் ஏறெடுத்து பார்க்கவில்லையே
என்று
ஏன்...! ஏன்...! ஏன்...!

என பல

“ஏன்” - களை

அவன் மனம் கேட்டுக் கொண்டிருந்தது.
யோசித்து… யோசித்து………. திடீரென
அவன் முகத்தில் 1000 வாட் பல்ப் ஒளி வீசியது.

“ஹலோ அம்மா நான் இன்றைக்கு வீட்டுக்கு வரமாட்டேன், நீங்க சாப்ட்டு படுத்துடுங்க, நான் வர லேட்டாகும்.. ஓ.கே.வா, பை”
என்று சுருக்கமாக தன் உரையை முடித்து செல்போனை அணைத்தான்.
மதுவின் வீட்டை நோக்கி செல்ல பயணமானான்.

■■■■

“ஏம்பா வாட்ச்மேன், பி8 பிளாட்டுக்கு எப்படி போகனும்” - சேகர்.
“ரைட்ல திரும்பினா பஸ்ட் பில்டிங் பி பிளாக், அதுல 8வது மாடிக்கு போங்க…..”

தேங்க்ஸ் சொல்லிவிட்டு நடந்தான்.

ஒவ்வொரு மாடியும் ஒரு தனி பிளாட் என 11 தளங்களை கொண்ட குடியிருப்பு. வெகு அழகாக இருந்தது. லிப்ட்டில் 8 என்ற பட்டனை அழுத்திவிட்டு லிப்ட் கண்ணாடியில் தன் முகத்தை துடைத்து தலையை சரிசெய்து கொண்டிருக்கும் போதே 8வது மாடி என்று பெரியயெழுத்து லிப்ட் கதவு திறந்ததால் கண்ணாடியில் தெரிந்தது.
விரைவாய் வெளியே வந்து அழைப்புமணியை அழுத்த விரலை கொண்டு செல்லும்போது உள்ளேயிருந்து “சளா….ர்” என்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு நின்றான்.

ஜன்னல்கள் லேசாக திறந்திருந்ததால் உள்ளே நடந்த உரையாடல்கள் தெளிவாக கேட்டன.

“எம்மேல இருக்கிற கோபத்த பாத்திரங்க மேல ஏம்மா காட்டர? நான் என்னமா பண்ணுவேன், டெய்லியும் 2 மணி நேரம் நான் மேக்அப் போடலைன்னா, எம்மூச்சிய என்னாலேயே பாக்க முடியாது, அவ்வளவு அம்மை தழும்பு நான் என்ன பண்ண” மதுவின் இனிமையான குரல் கரகரத்து கம்மிபோயிருந்தது.

“மேக்அப் தேவைபடாத வேலயா பார்த்துக்கோடீ, இந்த கரும்தாலதான அவன் அவன் இப்படி பன்னானுங்க” - வயதான பாட்டி குரல்.

“இல்லமா என்னதான், நா கஷ்டப்பட்டு வேல செஞ்சாலும் நான் படிச்ச 10ம் கிளாசுக்கு மாசம் ஐந்தாயிரம் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்மா, அத வெச்சு எப்படி நான் நம்ம 6 பசங்கள படிக்க வைக்கிறது, அதுங்களுக்கு துணிமணி வாங்கனும், ப்ளாட் மெயின்டெனன்ஸ், அது, இது, சாப்பாடு, உனக்கு மருந்து, எனக்கு காஸ்மெடிக்ஸ்ன்னு முடியாதும்மா...”

என்று சொல்லும்போதே அழுதாள்.

“முன்கோபி புருஷனுக்கு வாக்கப்பட்டு என்ன போல இந்த உலகத்துல யாரும் இருக்க மாட்டாங்கம்மா, எனக்கு மட்டும் ஆசையா என்ன, எனக்கு கல்யாணம் ஆகல! வயது 24ன்னு போட்டுகிட்டு, மேக்அப் பன்னிக்கிட்டு திரிய, இப்படி இருந்தாதாம்மா ஓரளவுக்கு நல்ல வேலை கிடைக்கும்... அவனவன் ஒட்டுறதும், ஒரசுரதும், கைப்பிடிக்க இளிச்சுகிட்டு வர்றதும், ச்சே.. எனக்கு மட்டும் பிடிச்சா வேலைக்குபோறேன்,

32 வயது ஆகிடுச்சு இன்னும் ஒரு 30 வருஷம் இருக்கப் போறோம், அதுக்குள்ள இந்த புள்ளைங்கள நல்ல நிலைமைக்கு ஆளாக்கிட்டா போதும்.. ”

“உம்புள்ள மட்டும் அன்னக்கி கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா ஏம்மா எனக்கிந்த கதி, ஜன்னல்ல ஸ்கிரீன் கட்ட ஏறின அவுங்க பிரண்ட் தவறி கீழே எம்மேல விழ, நாங்க ரெண்டுபேரும் பெட்ல விழுந்தத மட்டும் பார்த்திட்டு, கன்னமூடி கண்ண திறக்கறதுக்குள்ள அவன் சங்க அறுத்துட்டு, என்னையும் வயத்துல குத்திட்டு, பெத்த 2 புள்ளைங்களபத்திகூட யோசிக்காம செத்துட்டானே படுபாவி, உன் புள்ள செஞ்ச காரியத்தால அவனோட நாலு புள்ளங்களையும் எங்கையில கொடுத்துப்புட்டு அவன் பொண்டாட்டியும் செத்துட்டா... நான் என்னம்மா பண்ணுவேன்...”

என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி கதறி அழுதாள் மது.

“சில நேரத்துல செத்துபோயிடலாம்ன்று தோனும்மா, உன்னையும் நம்ம புள்ளங்களையும் மனசுல வச்சுத்தான் நான் என் உயிர கையில புடிச்சுக்கிட்டு இருக்கேன்

நான் அழாமல் தூங்கப்போற நைட் எப்போ வருமோ தெரியலமா”

என்று கண்கள் சிவந்து தேம்பி தேம்பி அழ துவங்கிய மதுவை கட்டிப்பிடித்த மூதாட்டியும் அழத்துவங்கினாள்.

“அழாதம்மா... எனக்கு மருமகளா இருந்தும் இப்படி என்ன உன் அம்மா மாதிரி பாத்துக்கரியேம்மா உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்மா” என்று அவள் மாமியாரும் ,

வெளியில் நின்று கொண்டிருந்த சேகரால் இதை தாங்கிக் கொள்ளமுடியாமல் அவனும் கண்ணீர்விட்டான். என்றாலும் சமாளித்துக் கொண்டு கண்ணைத் துடைத்துவிட்டு அழைப்புமணியை அழுத்தினான்.

“எங்கம்மா நல்ல நடக்குது” என்ற மது காலிங் பெல் ஓசைக்கேட்டு கண்களை துடைத்துக்கொண்டு

“யாரது”
என்று கதவை திறக்க வெளியே நின்று கொண்டிருந்த சேகர் கண்ணில்பட்டான். தான் மேக்-அப் இல்லாமல் இருப்பதை உணர்ந்தாலும் ஒரு முடிவுடன்,

“வாங்க... உள்ள வாங்க” என்று தன் அழுத முகத்தை மறைத்து நகைப்பான முகமூடி அனிய முற்பட்டாள்.

“சொல்லுங்க சேகர் திடீர்னு இந்த பக்கம், சரி என்ன சாப்டரீங்க” - மது

யார் வந்திருக்கிறார் என்பதை அறியாமல் விழித்து கொண்டிருந்த மாமியாரை பார்த்து,

“இவர் என் கம்பெனியில் அசிஸ்டென்ட் மேனேஜர்மா நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல” என்றாள்.

“நீங்க பேசிக்கிட்டிருங்க நான் காப்பி போட்டு கொண்டுவர்ரேன்”

- என்று மாமியார் அவர்களுக்கு தனிமையை ஏற்படுத்திவிட்டு தன் கண்களை துடைத்து கொண்டு சமையலறையை நோக்கி சென்றார்.

2 நிமிடம் மௌனத்தில் கரைய மறுத்தது. ஏதோ முடிவு செய்தவளாக மது மௌனத்தை கலைத்தாள்.


“நானே உங்கள பாக்கனும்னு நெனைச்சேன் சேகர்…… நான் ஸ்ரெயிட்டா பாய்ன்ட்க்கு வர்ரேன்.
நீங்க எம்மேல ஆச படுற அளவுக்கு எனக்கு எந்த தகுதியும் இல்ல, மேக்அப் இல்லாம என்ன பாக்கரீங்கள்ள இதுதான் நிஜம், நீங்க என்ன நெருங்கி வரும்போதெல்லாம் உங்கள அவாய்ட் பண்ணதுக்கு இதுதான் காரணம் ”

“அப்புறம் எனக்கு ஏற்கனவே கல்யாண.... ”

என்று தொடங்கிய மதுவை பார்த்து

“போதும் மது, போதும் நான் வெளியில நின்னு எல்லாத்தையும் கேட்டுகிட்டிருந்தேன்.

ஐயம் சாரி..... மது. பட், உன் போல நல்ல மனசு யாருக்கும் வராது, நான் வெளியிலேயே டிசைட் பண்ணிகிட்டேன், நீதான் என் மனைவின்னு... ”
சேகர் குரல் துதம்ப சொன்னான்.

கண்ணீர் மல்க உதடு துடிக்க சேகரை பார்த்து

“இல்லைங்க சேகர், என்னால உங்கள கல்யானம் பன்னிக்க முடியாது" -மது

"எனக்கு எல்லாம் தெரியும் மது ஆனா எனக்கு அதபத்தியெல்லாம் கவலையில்ல" - சேகர்

"இல்லை சேகர், உங்களுக்கு தெரியாத இன்னொன்னு இருக்கு..
“நீங்க படிச்சவங்க………“புரிஞ்சிக்குவீங்க………..”, என்று தயங்கினவளாய், குரல் உடைந்து

“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி மார்பக புற்றுநோயால என்னோட மார்பகங்களை இழந்துட்டேன் சேகர், என்னால யாருக்கும் சுகத்த... தர முடியா...” என்று குரல் கம்மியவளாய் கண்களில் நீர் நிரம்பிய நிலையில் தலை கவிழ்ந்து குலுங்கி அழுதாள்.

சேகருக்கு வானமே இடிந்து தலையில் விழுந்ததுபோல் இருந்தது... பேச்சே வரவில்லை.
சித்த பிரம்மை பிடித்தவானக, எந்த பதிலும் சொல்லாமல், அப்படியே எழுந்து கதவை திறந்து படிகளில் இறங்கி நடந்தான்

“சேகர்... சேகர்... ” என்று வாசல் வரை வந்த மது, ஏதும் சொல்ல முடியாமல் தேம்பி தேம்பி அழுதாள். மாமியார் வந்து ஆதரவாக அவளை படுக்கைக்கு அழைத்து சென்றார்.

“இவனும் அம்பள தானே” என்று மதுவின் கண்கள் சொன்னதை புரிந்து கொண்ட மாமி அவள் கண்களை துடைத்தாள்.

தினமும் சேகரின் நினைவு மதுவை கண்ணீர் சிந்தவைத்துக்கொண்டிருந்தது

நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் காலை 11.00 மணி காலிங்பெல் ஓசை கேட்டு

“இதோ வருகிறேன், யாரது இந்த நேரத்துல”

என்று கதவை திறந்த மது ஆச்சரியத்தால் வாயடைத்து போனாள். அவளது 6 பிள்ளைகளும் புத்தாடை அணிந்து ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாவுடன் நின்று கொண்டிருந்தனர்.
“ஹே...”
என்று கோஷமிட்டு கொண்டு அவளை அனைத்து கொள்ள போட்டி போட்டனர். வந்திருந்த அம்மா மது கேள்வி கேட்பதற்குள் உள்ளே வந்தமர்ந்து
“நான் சேகரோட அம்மா, நீ எதுக்கும் கவலபடாத... சேகர் எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டான். நான் ஏற்கனவே உன் மாமியார்கிட்ட பேசிட்டேன்... உங்களுக்கு இன்னக்கி நிச்சயதார்த்தம் அதனால ஹாஸ்டல் போயி இவங்களையெல்லாம் கூட்டிகிட்டு வந்தோம், கல்யானத்துக்கப்புறம் நீ வேலைக்கு போகவேன்டிய அவசியம் இல்ல, எல்லாத்தையும் சேகர் பாத்துகுவான், உனக்கு சம்மதம் தானே... ”

என்று மதுவை கேட்டாள், மதுவின் மாமியும் மதுவை பார்த்து ஒருபெருமிதபுன்னகையுடன் தலையாட்டினாள். மதுவிற்கு என்ன சொல்வதென்று புரியாமல் நகைப்பதா, அழுவதா என்று குழம்பிய நிலையில்
“சேகர்ர்………….. ” என்று இழுக்க...

“சேகர் காரை பார்க் பண்ணிக்கிட்டு இருக்காம்மா வந்துடுவான்” என்று முடிப்பதற்குள் மது வாசலை கடந்து லிப்ட் பட்டனை அழுத்திக் கொண்டிருந்தாள். என்றைக்கும் இல்லாமல் இன்று லிப்ட் மெதுவாக வருவது போல் இருந்தது.

ஐயோ... சீக்கிரம் சீக்கிரம் என்று முனுமுனுத்தாள்...

லிப்ட்ன் வாசலில் மேல் பாகத்தில் உள்ள டிஸ்ப்ளேயில்

3..

4..

5..

6..

7..

8..

என காண்பித்துக் கொண்டிருந்தது.

கதவு திறந்தவுடன் உள்ளே செல்ல நினைத்த மது, சேகரை உள்ளே பார்த்தவுடன் அவளால் ஏதும் செய்ய முடியாமல், ஒரு கனம் திகைத்துநின்றாள். அப்படியே உள்ளே சென்று அவனை அன்போடு தழுவிக்கொண்டாள். சேகரின் அம்மா வாசலில் இருந்து புன்னகையோடு நின்றுக் கொண்டு சேகருக்கு கையசைத்தார்.


லிப்ட் கதவு மெதுவாக மூடிக்கொண்டது.

டிஸ்ப்ளேயில் எண்கள் மாறிக் கொண்டிருந்தன

...8

.. 7

.. 6

.. 5

..உள்ளே நடந்தவைகள் உங்கள் கற்பனைக்கு...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ? – குறள்

7 comments:

Joe said...

நல்ல கதை.
மதுவைப் பற்றிய வர்ணனை ரொம்ப அதிகம், கதை நீளமாகிட்ட மாதிரி இருந்தது.

கடைசியில் நல்ல திருப்பம், சுபமான முடிவு.

எனது சிறுகதை முயற்சி ...
http://joeanand.blogspot.com/2009/06/blog-post_30.html

சித்த கார்த்திகை(stephen) said...

திரு ஜோ அவர்களே ! தங்கள் comment -ஐ பார்த்தவுடன், எனக்கு என் சிறுவயது நினைவிற்கு வருகிறது.


பட்ரோஸ் செடி ஒன்றை (ஒரு காம்பு மட்டும்) கொண்டுவந்து ஏதோ பெரிய வேளாண்மை செய்து விடுவது போல உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மண்ணாகி, ஒரு சிறிய தொட்டியில்(பழைய உடைந்த பிளாஸ்டிக் குடத்தின் கீழ்பாதி) வைத்துவிட்டு தினந்தோறும் விடியலில் காத்திருந்த பின், அது சிறிய துளிர் விட்டபோது(மலர் அல்ல வெறும் இலை). அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


என் கதையைக் கூட ஒருவர் படித்துவிட்டு comment எழுதியதை பார்த்து மீண்டும் அவ்வாறே மகிழ்கிறேன். நன்றி.

Joe said...

மூன்று காரணங்கள்
நல்லாருக்கு சொல்லக் கூடிய அளவில் நீங்க எழுதியிருக்கிறது.
நான் ஒரு பின்னூட்டப் புலி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள
என் தம்பியின் பெயரும் ஸ்டீபன்

நிறைய புத்தகங்களை வாசித்தால் இன்னும் பெரிய அளவில் வரும் வாய்ப்பு இருக்கிறது (ராமகிருஷ்ணன், ஜி.நாகராஜன், சாரு நிவேடிட இவர்களது புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களா?)

ஜோ என்றே கூப்பிடலாம், "திரு"-வெல்லாம் ரொம்ப அந்நியமா இருக்கு.

Can you please take off word verification?

So sad, you haven't left a comment on my story, perhaps it wasn't worth it, huh?

சித்த கார்த்திகை(stephen) said...

"மூன்று காரணங்கள்
நல்லாருக்கு சொல்லக் கூடிய அளவில் நீங்க எழுதியிருக்கிறது.
நான் ஒரு பின்னூட்டப் புலி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள
என் தம்பியின் பெயரும் ஸ்டீபன்



என்ன மூண்று காரணங்கள்?


நான் ஒரு பின்னூட்டப் புலி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள !!


இதெல்லாம் எனக்கு புரியவில்லை.

மொழி said...

நல்ல முயற்சி. சில இடங்களில் நல்ல நடையும் கூட.
கதை அநியாயத்துக்கு நீளமா இருக்கு. நிறைய செயற்கை வசனங்கள் வேறு. உதாரணத்துக்கு மதுவின் கதையை அவள் சொன்ன விதம். அதை கதாசிரியரே சொல்லி இருக்கலாம் என தோன்றியது...
வாழ்த்துக்கள்...

Joe said...

I specified those reasons why I commented on your post.

I'm a kinda guy who spends more time on writing comments on others' posts, than writing a new post on my own.

Vijayashankar said...

//வர்ணனை ரொம்ப அதிகம்//

//கதை அநியாயத்துக்கு நீளமா இருக்கு//

Nice!